உயர்தர மாணவர்களுக்கு எதிர்கால தொழில் உலகம் பற்றிய கருத்தரங்கு

 

 


 

 ( வி.ரி.சகாதேவராஜா)

உயர்தர மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய வழிகாட்டல் கருத்தரங்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில்பிரதி அதிபர் எஸ். ரவிஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்றான இந்நிகழ்ச்சியில் அம்பாறை மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரும் தொழில் வழிகாட்டல் ஆலோசகருமான ந.அருளானந்தம் வளவாளராக கலந்துகொண்டார்.

உயர்தர மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.