நேற்றைய தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்த 5 பேரும் இவர்கள்தான்..!




ஹோமாகம கட்டுவான தொழில்பேட்டையில் உள்ள தலைக்கவச தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து நேற்று (21) காலை 09:45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

3 மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியுள்ளதுடன், ஆரம்பத்தில் மூன்று நபர்கள் தீயில் சிக்கியதாக கூறப்பட்ட போதிலும், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தீயில் கருகிய நிலையில் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.

அவர்களில் மூவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

தற்பொழுது இந்த தீ விபத்தில் உயிரிழந்த 5 பேரின் படங்கள் வெளியாகியுள்ளன, இதில் ஒரு யுவதியும் அடங்குவதாக கூறப்படுகின்றது.

எவ்வளவு கனவுகளோடு உழைக்கச் சென்ற இடத்தில் தீ விபத்தில் கருகி உயிரிழந்த ஐந்து பேரின் உயிரிழப்பு இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.