வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு பதினொருபேர், பத்து ஓவர்கள் மட்டுப்படுத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.08.17ஆந் திகதி வீரமுனைபொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணியினர் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மார்க்ஸ்மேன் அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தினர் பத்து (10) ஓவர்களில் நிறைவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 67ஓட்டங்களை பெற்றனர்.
எதிர்த்தாடிய கல்முனை பெஸ்ட் இலவென் அணியினர் 10ஓவர்கள் நிறைவில் ஒன்பது (09) விக்கட்டுக்களை இழந்து 25ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டனர்.
குறித்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை எம்.ஐ.எம்.இர்ஸாத், சிறந்த பந்துவிச்சாளருக்கான விருதினை என். நபாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இச்சுற்றுப்போட்டியில்
சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மார்க்ஸ்மேன் அணியினருக்கு 50ஆயிரம் ரூபா பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.
இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட பெஸ்ட் இலவன் அணியினருக்கு 30ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.
மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட Trible G அணியினருக்கு 10ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது,
நான்காம் இடத்தை பெற்றுக்கொண்ட யுனிட்டி அணியினருக்கு 5000ஆயிரம் பணம் வழங்கப்பட்டது
குறித்த சுற்றுப்போட்டி நிகழ்வுக்கான அனுசரனையினை பீனிக்ஸ் விளையாட்டுக்கழகத்தின் நிறுவாகத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.