கிழக்கு மாகாணத்திலே ஆயிரக்கணக்கான அடியார்கள் தீ மிதிக்கும் மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அ ம்பாள் தேவஸ்தான புணராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஞ்சதல ராஜ கோபுரத்திற்கான மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழா இன்று 2025.06.08 காலை மிக பக்தி பூர்வமாக இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முதல் தடவையாக 121 அடி நவதல சோழர் காலத்து பரம்பரையில் அமைக்கப்பட்ட ராஜ கோபுரத்திற்கான கும்பாபிஷேக குடமுழுக்கு கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ கு. விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் வெகு சிறப்பாக இடம் பெற்றது
கடந்த நான்காம் தேதி கிரிகைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து ஆறாம் ஏழாம் திகதிகளில் எண்ணெய் காப்பு இடம் பெற்று இன்று காலை விநாயகர் வழிபாடு பூர்ணா குதி விசேட பூஜைகளை தொடர்ந்து நாட்டியாஞ்சலி இடம்பெற்றுவேதபாராயணம் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க ஆயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்துடன் கண்ணீர் மல்க உலங்கு வானூர்தியிலிருந்து அம்மாளுக்கு பூச்சொரிய ஸ்ரீ பத்ரகாளியம்மாளுக்கு விநாயகர் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கும் கும்பாபிஷேக பெருவிழா இடம் பெற்றது .
வரதன்