13 மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

 


யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வறட்சியால் 21 ஆயிரத்து 999 குடும்பங்களை சேர்ந்த 70 ஆயிரத்து 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 18 ஆயிரத்து 951 குடும்பங்களை சேர்ந்த 63 ஆயிரத்து 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வட மேல் மாகாணத்தில் 5 ஆயிரத்து 219 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..

மேல் மாகாணத்தில் 2 ஆயிரத்து 890 பேரும் தென் மாகாணத்தில் 7 ஆயிரத்து 512 பேரும் மத்திய மாகாணத்தில் 1215 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் 469 குடும்பங்களை சேர்ந்த 1809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என வறட்சி தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 329 குடும்பங்களைச் சேர்ந்த 1324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.