மூளையினை ஊடுருவுவது எப்படி? என்பதை அறிந்து கொள்ளும் 'கனவு மெய்ப்படுகின்றது' எனும் தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது.
பெண்கள் மேம்பாட்டு அமையம் மற்றும் கல்முனை லயன்ஸ் கழகத்தினரின்
அனுசரணையோடு கனவு மெய்ப்படுகின்றது அமைப்பின் ஸ்தாபகர் மனித உரிமை
செயற்பாட்டாளர் திருமதி நளினி ரெட்ணராஜா ஒருங்கிணைப்பில் கனவு
மெய்ப்படுகின்றது குழுமத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வு முற்றும்
முழுதாக இலவசமாக நடாத்தப்பட்டது.