மட்டக்களப்பு ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய முத்துவான் அன்சார் என்ற குடும்பஸ்த்தரே உயிரிழந்துள்ளார்.
மேற்று மாலை வழக்கம் போல் ஓட்டமாவடி ஆற்றிலுள்ள ஆமை ஓடை குடாவில்
மீன் பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததால் அவரை தேடும் பணியில்
உறவினர்கள் ஈடுபட்டனர்.
அவர் இறால் பண்ணைக்கு அருகாமையிலுள்ள நீரோடையில் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று அடையாளங்காணப்பட்டார்.
சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கும் தகவலளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
கவத்தமுனை
பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணையின்;
பாதுகாப்பு கருதி வேலிகளுக்கு மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளமை
தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள மின் இணைப்பில் சிக்கியே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.