அதிக வெப்பம் நிலவி வருவதால் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 


இலங்கையில் தற்போது அதிக வெப்பம் நிலவி வருவதால் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நாளில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றும் பரவி வருவதால் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென சுவாச நோய் தொடர்பான நிபுணர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.