வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

 


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

 வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வான மாவீரர் நிகழ்வு தொடர்பான பதிவினை முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 28.11.2020 ஆம் திகதி அன்று வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

 07.03.2022.ஆம் திகதியன்று நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். வியாழக்கிழமை (27) வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.