ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இந்தியாவின் டாடா குழுமம் முதலிட தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 


சிறி லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இந்தியாவின் டாடா குழுமம் முதலிட தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOEs) தனியார்மயமாக்குதல் அல்லது மறுசீரமைத்தலை செயற்படுத்த இலங்கை அரசாங்கம் அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு குழு ஒன்றை அமைத்தது.

 டாடா இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு $2.4 பில்லியன் கொடுத்து வாங்கியது, இந்த நடவடிக்கை விமான நிறுவனத்திற்கு மறுபிறவியாகக் கருதப்படுகிறது. மேலும், டாடா குழுமம் உலகளவில் ஏறக்குறைய 100 நிறுவனங்களை நடத்துகிறது, இதில் பட்ஜெட் ஏர்லைன் ஏர் ஏசியா மற்றும் முழு சேவை கேரியர் விஸ்டாரா ஆகியவை அடங்கும்.

இத்தகைய கையகப்படுத்துதல்கள் மூலம், தெற்காசிய விமானத் துறையில் டாடா சுமார் 27 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது.

 சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி உதவியுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் இந்திய வணிகங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற துறைகளில் இருந்து விலகுவதை இலங்கை கருதுவதால், அவற்றில் அதிக இந்திய முதலீட்டாளர்கள் முதலிட ஈர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை முன்னர் அதன் 40 சதவீத பங்குகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுக்கு விற்கப்பட்டது, இது விமானத்தின் செயல்பாட்டு அம்சங்களை நிர்வகிக்கிறது.