நாட்டில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை.

 


நாட்டில்  பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ​​இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் 16 நிலநடுக்கங்களும்,  2021 ஆம் ஆண்டில்  18 நிலநடுக்கங்களும்,  2022 ஆம் ஆண்டில் 5 நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.