ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை 700 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 22 வயது இளைஞன் ஒருவர் மரணத்தைத் தழுவியுள்ளார்

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் டெங்கு நோய் தீவரமாகப் பரவி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் கடந்த  ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று 25ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 700 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 22 வயது இளைஞன் ஒருவர் மரணத்தைத் தழுவியுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து, டெங்கு நோயை ஒழிக்கும் விசேட வேலைத்திட்டங்கள் மாவட்ட ரீதியாக இடம்பெற்று வருகின்றன என்றும் அதற்கு ஒத்துழைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்றும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.