தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு!!

 











மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவி தெரிவத்தாட்சி அலுவர்களுக்கான (ARO) தெளிவூட்டல் செயலமர்வு. மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) திகதி இடமபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான எம்.வீ.எம்.சுபியான் ஒழுங்குபடுத்துதலின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09ம் திகதி இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக தேர்தல் கடமைகளின் போது உதவி தெரிவத்தாட்சி அலுவர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது அறிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
இதன் போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ம், 24ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெறவுள்ளதனால் தபால் வாக்களிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னாயத்த வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் இச் செயற்பாட்டின் போது உதவி தெரிவத்தாட்சி அலுவர்கர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கான ஆலோசனைகள் இதன்போது வழங்கப்பட்டது.
இந் நிகழ்வின் போது மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி.நவருபரஞ்சினி முகுந்தன் (காணி) மற்றும் பதவிநிலை அதிகாரிகள், முப்படை உயரதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.