பள்ளிவாசல் குண்டுவெடிப்பில் 28 பேர் உயிரிழந்ததுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

 


பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றுக்குள்  இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 28 பேர் பலியானதுடன் மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர். 

பெஷாவர்  நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தின் பள்ளிவாசலுக்குள், பிற்பகல் தொழுகையின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அதிகரிரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பினால் பள்ளிவாசலின் கூரை, மற்றும் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தன. பலர் இன்னும் பள்ளிவாசல்களுக்குள் சிக்கியுள்ளனர் எனவும், அவர்களை மீட்பதற்காக இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையில் கனரக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளஎன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெஷாவரிலுள்ள வைத்தியசாலைகளில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது என பெஷாவர் பொலிஸ் ஆணையாளர்  ரியாஸ் மெஷூத் தெரிவித்துள்ளார்.