மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 


அக்கரைப்பற்றில் 1985ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

14 வருடங்களாக நடத்தப்பட்ட ஜூரி விசாரணையைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதியை விடுவித்துள்ளது.

1985ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி அக்கரைப்பற்றில் நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டி பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, பிரதிவாதிக்கு 10 ஜூன் 2009 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஜூரி விசாரணையின் முடிவில், அந்த தீர்ப்பை ரத்து செய்து அவரை விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

14 வருட ஜூரி விசாரணையின் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரதிவாதியை விடுதலை செய்தது.