Student Visa பெற்றுத் தருவதாக கூறி மோசடி யில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.


 

அவுஸ்ரேலியா மற்றும் கனடாவில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு Student Visa பெற்றுத் தருவதாக கூறி மோசடி யில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணைகள் காரியாலய அதிகாரிகள் கடந்த (14) ஆம் திகதி இவரைக் கைது செய்தனர். கல்வி ஆலோசனை முகவர் நிலைய மொன்றை நடத்தி வந்த இவர், பாரிய நிதி மோசடியில் ஈடுபட் டுள்ளார். 

 கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இவர், இம்மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவர் மீது 33 பேர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.