இளைஞர்களை நல்லிணக்கத்திற்க்காக வலுவூட்டும் வகையில் வை-சேன்ச் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.


 

ஹெல்விடாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் சமாதானமும் சமூக பணி பி.சி.எ நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர்களை நல்லிணக்கத்திற்க்காக வலுவூட்டும் வகையில் வை-சேன்ச் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

இதனடிப்படையில் மாவட்ட இளைஞர்கள் நல்லிணக்க குழுவிற்க்கான திட்ட அறிமுக நிகழ்வு  அம்பாரையில் இடம்பெற்றது.

அம்பாரை மாவட்டத்தில் இளைஞர்கள் நல்லிணக்க குழுவினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க செயற்;பாடுகள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதில் வை-சேன்ச் திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ. சுதாவாசன், அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி,எச்.எஸ்.ஹசனி,டப்ளியு . எம்.சுரேகா,எம்.எல்.ஏ.மாஜீத், சமாதான தொண்டர்கள், உட்பட அம்பாரை மாவட்ட இளைஞர் நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.