மோட்டார்
வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும்
விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய
நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று
வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப்
பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ்
வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி
அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு
படம் பிடிக்கப்படுவார்கள்.
வழக்கமான
கேமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி
விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன்
சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து
தப்பிக்க முடியாது.
இத்திட்டம்
முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9
பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.





