பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

 


பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 1950ஆம் ஆண்டு செளகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஜானகி, அதன்பின்னர், செளகார் என்ற சிறப்பு பெயரோடு சேர்த்து செளகார் ஜானகி என அழைக்கப்பட்டார்.

1952-இல் வளையாபதி திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ்த் திரையுலகில் செளகார் ஜானகி அறிமுகமானார்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் செளகார் ஜானகி நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார்.

தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், தில்லுமுல்லு, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு பெரும் புகழை சேர்த்தன.

2020-ஆம் ஆண்டில், சௌகார் ஜானகி தனது 400-ஆவது திரைப்படமான சந்தானத்தின் ''பிஸ்கோத்'' படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.