கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று சனிக்கிழமை (15) இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
இந்தியாவின் 80வது சுதந்திர தினமானது இன்றைய தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இலங்கையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார்.




