போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுக்குட்பட்ட சுமார் 150 யுவதிகள் கைது .

 


நாட்டில் பரவலாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்ட ‘ரதம் ஏகதா’ தேசிய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், 21 வயதுக்குட்பட்ட 7300 இளைஞர்கள் உள்ளனர் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை பிரதி காவல்துறை மா அதிபர் அசோக தர்மசேன நேற்று கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

இந்தக் குழுவில் 21 வயதுக்குட்பட்ட சுமார் 150 பெண்கள் உள்ளனர் என்றும், இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டு லட்சத்து பதின்னாகாயிரத்திற்கும் (2,14,000) மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுப்பது, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்ட பல நோக்கங்களுடன் இந்த தேசிய நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.