ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் காவல்படையின் செய்தித் தொடர்பாளரான மேஜர் ஜெனரல் அலி முகமது நயீனி கொல்லப்பட்டுள்ளார்.
இதனை ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலி முகமது நைனி புரட்சிகர காவல்படையில் நாற்பது ஆண்டுகள் பணியாற்றியதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வருவதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





