இன்று அயோத்​தி​யில் பிரம்​மாண்​ட​மாக கட்​டப்​பட்​டுள்ள ஸ்ரீ இராமர் கோயி​லின் கொடியேற்று விழா.

 





அயோத்​தி​யில் பிரம்​மாண்​ட​மாக கட்​டப்​பட்​டுள்ள ஸ்ரீ இராமர் கோயி​லின் கொடியேற்று விழா இன்று (25) பிரதமர் மோடி தலை​மை​யில் கோலாகல​மாக நடை​பெற்றது.

அயோத்​தி​யில் பிரம்​மாண்ட இராமர் கோயில் கட்​டும் பணி கடந்த 2020 ஓகஸ்​டில் தொடங்​கியது. இக்​கோ​யில் கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி பக்​தர்​களின் வழி​பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டது. இதற்​கான பிராண பிர​திஷ்டை விழா பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதன் பிறகு அயோத்​தி, மற்​றொரு பிரம்​மாண்ட விழாவுக்கு தயா​ரானது. இராமர் கோயி​லின் கட்​டு​மானப் பணி​கள் நிறைவடைந்​ததை குறிக்​கும் வகை​யில் இன்று பிர​தான கோயில் கோபுரத்​தில் கொடியேற்​றும் விழா நடை​பெறற்றது. பிரதமர் நரேந்​திர மோடி இவ்​விழா​வில் பங்​கேற்​று, கோயி​லின் 161 அடி உயர கோபுரத்​தின் உச்​சி​யில் காவிக் கொடி ஏற்றி வைத்தார். இதற்​காக இராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்​கும் வகை​யில் சூரிய சின்​னம், மையத்​தில் ஓம் மற்​றும் மந்​தாரை மரம் பொறிக்​கப்​பட்ட காவிக் கொடி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவுக்கு அயோத்​தி​யில் விரி​வான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. சாலை அனைத்​தும் தூய்மை செய்​யப்​பட்​டு, நகரம் காவிக் கொடிகள் மற்​றும் தோரணங்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டது. இரவில் நகரம் வண்ண விளக்​கு​களால் ஜொலித்தன.

பிர​தான பால இராமர் கோயிலு டன் மகாதேவ், விநாயகர், அனு​மன், சூரியதேவ் உள்​ளிட்ட துணை கோயில்​களும் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன. விழா சடங்​கு​களை பிரபல காசி பண்​டிதர் கணேஷ்வர் சாஸ்​திரி வழி​காட்​டு​தலின் கீழ் அயோத்​தி, காசி மற்​றும் தென்​னிந்​தி​யாவை சேர்ந்த 108 ஆச்​சா​ரியர்​கள் மேற்​கொண்டனர். பிரதமரின் வரு​கையை முன்​னிட்டு பலத்த பாது​காப்​பு ஏற்​பாடு​கள்​ செய்​யப்​பட்டிருந்தமையும் குறிறப்பிடத்தக்கது.