.jpeg)
புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு - கலாசார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், அரச நடன மற்றும் நாட்டிய நாடகக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக்கான அரச நடன விருது வழங்கும் விழா 2025.11.17 அன்று புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது.
குறித்த அரச நடன விருதுக்கான போட்டிகள் யாவும் வவுனியாவில் இடம் பெற்றது .
மட்டக்களப்பு அட்ஷய ஷேஸ்த்ரா நடனப் பயிற்சி மையத்தில் பயின்ற
மாணவி செல்வி இஷானிகா.விக்னேஸ்வரன் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றி (நடனம் தனி - சப்தம்) தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் .
இஷானிகா.விக்னேஸ்வரன் வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது .
2024 இல் அகில இலங்கை நடன போட்டியில் (கொடுகொட்டி நடனம்)
தேசிய மட்டத்தில் 1 ம் இடத்திலும்
2023இல் அகிலஇலங்கை தமிழ்மொழி தினம் நிகழ்வில் (நடனம் தனி)
தேசிய மட்டத்தில் 2ம் இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மட்டக்களப்பு அட்ஷய ஷேஸ்த்ரா நடனப் பயிற்சி மையத்தின் பணிப்பாளரும் , நடன இயக்குனரும், புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் ஆசிரியருமான திருமதி நித்யா விக்னேஸ்வரன் அவர்களின் புதல்வி என்பது சிறப்பம்சமாகும்
EDITOR











