தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டு இருபது வருடங்களாக தலைமறைவாக இருந்த தந்தை ஒருவர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை மெதிரிய பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரான தந்தைக்கு எதிரான வழக்கு மொனராகலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, சந்தேக நபருக்கு இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக கூறப்படுகிறது.
அத்தோடு, சந்தேகநபருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலும் இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





