நடிகர் அஜித்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் .

 


சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. 
 
செய்தி அறிந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை செய்கின்றனர். 
 
அதன்பின், அது வெறும் புரளி தான் என தெரியவருகிறது. 
 
இந்தநிலையில் நடிகர் அஜித்தின் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடிகர் எஸ்.வி. சேகர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீட்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 
 
இதன்பின்னர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 
 
சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. 
 
இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.