திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரிசீலிக்குமாறு மத்திய உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சுகளுக்கு மதுரை மேல் நீதிமன்றக் கிளை அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தனக்கும் தனது குடும்ப
உறுப்பினர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரி நபர்
ஒருவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் தனது மனுவில், தான் இந்திய
வம்சாவளி தமிழர்களுக்கு இலங்கையில் பிறந்தவர் என்றும், அவரது மூதாதையர்கள்
தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இலங்கைக்கு இடம்பெயர்ந்தவர்கள்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.





