முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில்
அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் நேற்று வாங்கப்பட்ட உணவுப் பொதியில்
புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உணவகம் அமைந்துள்ள அதே பகுதியைச்
சேர்ந்த நபர் ஒருவர் மதிய சாப்பாட்டிற்காக குறித்த உணவகத்திலிருந்து ஐந்து
உணவுப்பொதிகளை வாங்கி சென்றுள்ளார்.
சாப்பிடுவதற்காக பொதியை திறந்த போது, மீன் பொரியல் உணவிற்குள் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் குறித்த நபர் உடனடியாக சுகாதார பரிசோதகருக்குத் தகவல் வழங்கினார்.
அவர் வழங்கிய முறைப்பாட்டின்
அடிப்படையில் உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து,
சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட உணவகம் மீது சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், உணவின் தரத்தைப் பேணுவதில்
அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என
சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





