மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

 


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்று (07) இரவு முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

மட்டக்களப்பு கல்முனை வீதியில் மட்டக்களப்பு பகுதியிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே விபத்தில் சிக்கிக்கொண்டது.

விபத்தில் காயமடைந்த 3 பேரும் முதலில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.