அரச நடன விருது விழா -2025 இல் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகள் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை சுவீகரித்து சாதனை.

 

 

 


 

 



  

 






 புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு -  கலாசார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம்,  அரச நடன மற்றும் நாட்டிய  நாடகக் குழு   ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக்கான அரச நடன விருது வழங்கும் விழா   2025.11.17 அன்று   புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது.  
  குறித்த அரச நடன விருதுக்கான  போட்டிகள் யாவும்  வவுனியாவில் இடம் பெற்றது .

 மட்டக்களப்பு   வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் இருந்து  செம்பு குழு நடனத்தில் பங்கு பற்றிய மாணவிகள்     (வயது 11-12 ) தேசிய  ரீதியில்    3ஆம் இடம் பெற்று பாடசாலைக்கும் மட்டு மண்ணுக்கும்  பெருமை செர்த்துள்ளார்கள். 
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை  நடன ஆசிரியை  திருமதி சபாரெட்ணம் சிந்து    அவர்களின் நெறிப்படுத்துதலில்   செம்பு குழு நடனம் மாணவிகளுக்கு    பயிற்றுவிக்கப்பட்டு தேசிய நடன விழாவில் பங்கு பற்றியமை   குறிப்பிட தக்கது  .