குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த கொடுப்பனவு நாளைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது.
அதற்கமைய 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





