அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

 






 
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குத்து விளக்கு ஏற்றித் தீபாவளியைக் கொண்டாடினார். 
 
இந்த நிகழ்வில் FBI இயக்குநர் காஷ் படேல், தேசியப் புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், வெள்ளை மாளிகை துணை பத்திரிகை செயலாளர் குஷ் தேசாய், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா மற்றும் டெல்லிக்கான வாஷிங்டன் தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.