பொசோன் பொயா (Poson Poya) தினத்தை முன்னிட்டு மதுபானம் மூடப்படும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுவரித் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று (28-06-2026) முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்.
வடமத்திய மாகாணத்தின் மிஹிந்தலை, மதவாச்சி மற்றும் மஹாவிலாச்சிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் அமைந்துள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.
அரச பொசோன் கொண்டாட்டங்களுடன் இணைந்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொசோன் வாரத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
விதிமுறை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1913 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக அதன் செயல்பாட்டு மையத்திற்கு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்றும் மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறும் அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு (Licence holders) எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதோடு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து மதுவரி அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





