மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த பாடசாலை ஒன்று கூடல் நேர வேளையில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற பஹ்ரைன் செல்லும் மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந் பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார் .

 



 

 



 


















மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய  மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந் மத்திய கிழக்கு  பஹ்ரைன் நாட்டின்  தலைப்பட்டினம் மனாமாவில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில்  16 வயது- 60கிலோ பிரிவுக்கு உட்பட்ட மல்யுத்தப்போட்டியில் பங்கு பற்றுவதற்காக பஹ்ரைன் பயணமாக உள்ளார் .
அதனை முன்னிட்டு இன்றைய தினம்  மட்டக்களப்பு கல்லடி உப்போடை   சிவானந்த வித்தியாலய அதிபர்  S.தயாபரன் அவர்களால்  மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார் . இவ் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் .
  அகில இலங்கை ரீதியில்   மல்யுத்தப்போட்டிக்கு  பஹ்ரைன் செல்லவிருக்கும்   10 பேர்  கொண்ட குழுவில் 5.மாணவர்களும் 5. மாணவிகளும் அடங்குகிறார்கள் . இதில் அகில  இலங்கை ரீதியில் பாடசாலை மட்ட மல்யுத்தப்போட்டியில் 2024மற்றும் 2025வருடங்களில் தேசிய ரீதியில்  தங்கப்பதக்கம் வென்ற  ஒரே  மாணவன்  டிருஷாந் என்பது குறிப்பிடத்தக்கது .
 தேசிய ரீதியில் மல்யுத்தப்போட்டியில் பங்கு பற்ற   பஹ்ரைன் செல்லவிருக்கும் ஒரே தமிழ் மாணவன் என்ற பெருமையை டிருஷாந்  தனதாக்கி கொண்டார் .
மாணவன்  டிருஷாந்தினால் சிவானந்த வித்தியாலயம் பெருமை கொள்கிறது , அதே சமயம் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழக பயிற்றுவிப்பாளர் திருச்செல்வத்தின்   கடுமையான உழைப்பும் ,விடாமுயற்சியும் இங்கு பாராட்டப்படவேண்டியதொன்றாகும் . 
  மட்டக்களப்பு நாவற்குடாவை  சேர்ந்த  வேலு திருச்செல்வம்  இலங்கை இளைஞர் அணியின் மல்யுத்த பயிற்றுவிப்பாளராக பணியாற்றுகிறார். 
அவரின் தலைமையிலேயே  மல்யுத்த போட்டியாளர்கள் செல்ல உள்ளனர் 
.