இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் தனது தனிப்பட்ட நூலகத்தில் இருந்து சில புத்தகங்களை கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த
நன்கொடையில் பெறுமதியான கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்ததாக சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
சமூக
ஊடகங்களில் அவர் வெளியிட்ட அறிக்கையில்: “எனது தனிப்பட்ட நூலகத்தில்
இருந்து பெறுமதியான கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து
கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினேன், மேலும் நூலக
ஊழியர்களுடன் சிறிது நேரம் செலவழித்தேன்.
இந்த சந்தர்ப்பத்தில், பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட மற்றும் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி ஆகியோர் வழங்கிய ஆதரவையும் ஒருங்கிணைப்பையும் நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன்,” என்று அவர் கூறினார்.





