நீண்டகால கசிப்பு வியாபாரி ஒருவர் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் மாட்டிக்கொண்டார்





வாழைச்சேனை பொலெஸ் பிரிவுக்குட்பட்ட முறாவோடை பகுதியில் அமைந்துள்ள  பாடசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு 
ஒருவரை  கைது செய்துள்ளதாக கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தெரிவித்தார்.

'முழு நாடுமே ஒன்றாய்' போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தேசிய செயற்பாட்டு திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட போது 100 லீற்றர் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினரின் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வகையில்  வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தெரிவித்தார்.

 

  ந.குகதர்சன்