கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக சர்வதேச மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மார்பக புற்றுநோயை கண்டறிவோம் சிகிச்சை செய்வோம் தோற்கடிப்போம் எனும் திட்டத்தின் கீழ் இன் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு கட்டமாக
இன்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ் உதயகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது
இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று பேர் மரணிப்பதாகவும் தினசரி 15 நோயாளிகள் இனம் காணப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இந்த நோய் இள வயதிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அதனை குணப்படுத்த முடியும் எனவும் பெண்கள் தினசரி சுய பரிசோதனை மூலம் இந்த நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் இன்றைய விழிப்புணர்வு நிகழ்வின் போது பிரதம அதிதியாக கருத்து முன் வைக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரா முரளீஸ்வரன் சிறப்பு அதிதியாக மண் முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி வி சிவப்பிரியா மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மார்பகப் புற்றுநோயின் பாதிப்புகள் பற்றி விசேட வைத்திய நிபுணர் எஸ் ஸ்ரீதரன் அவர்களால் இங்கு விசேட விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வரதன்