பொதுமக்களை ஏமாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதன்பொருட்டு, மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களை கோரியுள்ளது. இது குறித்த தகவல்களை பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு 0112 882228 என்ற தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வழங்க முடியும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக பொலிஸ் பிரிவுக்கு ஏற்கனவே ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனால்.இதனுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு புலனாய்வு அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற ஒரு பெண் உட்பட இருவர் கைதாகியுள்ளனர். துபாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி கிரிபத்கொடையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து ரூ. 800,000 பெற்ற ஒரு பெண்ணும், குருநாகலில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான ஆட்சேர்ப்புக்கு நேர்காணலை நடத்திய இன்னுமொருவருமே கைதானவர்களாவர்.