இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன், யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்தப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். மேலும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
அத்துடன் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்” எனத் தெரிவித்தார்!