இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 55 வயதில் 17 வது குழந்தையை பெற்றெடுத்தமை மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் அந்த பெண் மருத்துவமனையில் நான்காவது குழந்தை என்று கூறி, பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணுக்கு 05 குழந்தைகள் பிறந்த சில நாட்களில் உயிரிழந்து விட்டன. மீதமுள்ள குழந்தைகள் இவர்களுடன் வசித்து வருகின்றனர். அதில் 5 குழந்தைகளுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது.இந்த சூழலில், ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இவர் 55வது வயதில் 17வது குழந்தையை பெற்று எடுத்தார். தாயும் குழந்தையும் நலமுடன் இருக்கின்றனர்.





