வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளர் .

 


வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது  தமிழ் பெண்  செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

யாழ் சங்கானை பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுபாஜினி நிர்வாக சேவை சிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு முதல் தமிழ் பெண் செயலாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்