வீட்டிலுள்ள பிரிண்டரில் போலி நாணயத்தாள்களை அச்சகடித்து செலவு செய்த நபர் அதிரடியாக கைது .

 

 


 மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (14) மாலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேக நபர் 10 5,000 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மொரட்டுவ, ராவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடையவர்.

சந்தேக நபரை மேலும் விசாரித்தபோது, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம் மற்றும் 25 போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், 08  1,000 ரூபா நாணயத்தாள்கள், 100 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 02  20 ரூபா நாணயத்தாள்கள் சந்தேக நபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்