அமெரிக்க சர்வதேச பல்கலைக் கழகத்தில் கல்முனை றோட்டரியினால் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச கற்கை நெறிகள்.

 









மட்டக்களப்பில் இயக்கிவரும்  அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் கல்முனை றோட்டரிக்கழகத்தின்
அனுசரணையில் 
 வசதி குறைந்த பதினேழு மாணவர்களுக்கு  இலவசமாக இரண்டு கற்கை நெறிகள் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

2025/26 ம் வருட புதிய தலைவர் ரொட்டரியன் இ. தரணிதரனின் வழிகாட்டலில் நடைபெறும் 
ஆங்கில டிப்ளோமா ( Diploma in English), மற்றும் அடிப்படை தகவல் தொழில் நுட்ப  கற்கை நெறி (Basic (Information Tecnology)ஆகியவற்றிற்கு கன்பேரா றோட்டரிக்கழகம்,  அவுஸ்திரேலிய, கன்பேரா தமிழ்ச் சங்கம் என்பன (680,000/-)நிதிவழங்குகின்றன.

 வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் கழகத்தின் செயலாளர் ரோட்டரியன் மு. சிவபாதசுந்தரம், ரோட்டரியன் க. குகதாஸ் ,கழக பயிற்றுவிப்பாளர் , பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ், ஜெபகுமார், முகாமையாளர்  -அகமட் சப்ரி மற்றும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்,
 
 (  வி.ரி.சகாதேவராஜா)