பாகிஸ்தானில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 9 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்

 


பாகிஸ்தானின் லாகூர் மாகாணம் பாக்தாதி பகுதியில் அமைந்துள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்த அடுக்குமாடி குடியிருப்பு 40இற்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். 

இந்த சம்பவத்தில்  9 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,

 இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனடிப்படையில் அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.