கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (15) கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்டதாகவும், இராம பிரானால் வழிபடப்பட்டதாகவும் கருதப்படும் மாமாங்கேஸ்வரரின் வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை கொண்டு செல்லும் நிகழ்வு நேற்று (14) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இன்று பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியது
பத்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தில் தினமும் தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா என்பனவை நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 23 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 24 ஆம் திகதி மிக முக்கியத்துவமான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் தீர்த்தக் கேணியில் சிறப்பாக நடைபெறவுள்ளன.