பொது நிதியை தேவையற்ற முறையில் வீணாக்குவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் கொள்கையின்படி, சம்பந்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்களை எரிசக்தி அமைச்சிடம் பெறலாம், விண்ணப்பங்களைப் பெற்ற நபர்கள் வாகனங்களை ஆய்வு செய்யலாம் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களை 0112 574 740 மற்றும் 0112 574 941 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.