இந்தியா - உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் மூன்று வயது சிறுமியை கடத்திச் சென்று தவறாக நடந்து கொண்ட நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை டெட்ரோ பகுதிக்கு அருகில் உள்ள பாலத்தின் கீழ் தனது
தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார்.
காலையில் சிறுமியை காணாததால் சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுமி கடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில்,
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனையின் போது குறித்த சிறுமியிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போது
சிசிரிவி காணொளி ஒன்றின் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக சென்ற காவல் துறையினர் மீது குறித்த நபர்
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால், தற்காப்புக்காக சந்தேகநபர் மீது
காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.