நேபாளத்தில் முதல் முறையாக, குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் நோக்குடன் ஒரு தாய்ப்பால் வங்கி நிறுவப்பட்டுள்ளது.
குறைந்த எடையுடன் பிறக்கும்
குழந்தைகளுக்கும், குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும்,
முறையாகப் பராமரிக்கப்படாத குழந்தைகளுக்கும் இந்த வங்கியின் மூலம் சேவைகள்
வழங்கப்படுகின்றன.
யூனிசெஃப் அமைப்பு, நேபாள அரசாங்கம் என்பன இணைந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.