ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான தொடருந்து பாலமானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
1,315 மீற்றர் நீளத்தில் இரும்பால்
கட்டப்பட்ட இந்த பாலம், நில அதிர்வு மற்றும் பலத்த காற்றைத் தாங்கும்
வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பாலமானது ஈபிள் கோபுரத்தை விட 35 மீற்றர் உயரம் கொண்டது.
உலகின் மிக உயரமான தொடருந்து பாலமான இது, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான
போக்குவரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்
என்று கூறப்படுகிறது