ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி சில சிறைக்கைதிகளை விடுவித்தமை தொடர்பில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது .

 

 

 
ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி கைதியை விடுவித்த விவகாரத்தில், அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி சில சிறைக்கைதிகளை விடுவித்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. 
 
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 
 
இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.